Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் ... செஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் செஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோழியூர் ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோழியூர் ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2026
12:01

திட்டக்குடி: கோழியூர் சவுந்திர நாயகி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கோழியூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சவுந்திரநாயகி உடனுறை ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி முடிந்து, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


விழா, கடந்த 26ம்தேதி மாலை 5:00 மணியளவில் முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7:00 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, இரவு 7:00 மணியளவில் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.


நேற்று காலை 5:00 மணியளவில் நான்காம் கால யாக பூஜை, 10;00 மணியளவில் கடம் புறப்பாடாகி, அமைச்சர் கணேசன் கொடியசைத்து, வேதமந்திரங்கள் முழங்க, மூலவர் கோபுரம் மற்றும் அம்பாள் சன்னதி, விநாயகர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.


விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சந்திரன், பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், அரசு கூடுதல் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தமிழ்மணி, ராதாகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் சிவபிரகாசம், நகராட்சி ஆணையர் முரளிதரன், துணை சேர்மன் பரமகுரு, பெண்ணாடம் பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூமிநாதன், ஒப்பந்ததாரர் பொன்னுசாமி, திருப்பணி குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர். ஆவினங்குடி ரமேஷ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar