Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் புதிய ... ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

29 ஜன
2026
12:01

திருநின்றவூர்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.


திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் சமேத இருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.


அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் திருப்பணி முடிந்த நிலையில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.


இதை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, கணபதி ஹோமத்தில் இருந்து பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன.


இந்த நிலையில், கும்பாபிஷேக நாளான நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, சோமகும்ப பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கலச புறப்பாடு நடந்தது.


பின், மூலவர் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், இருதயாலீஸ்வரர், மரகதாம்பிகை மற்ற மூல மூர்த்திகள், பரிவார தெய்வங்களுக்கு சமகால கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.


இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். நேற்று மாலை மரகதாம்பிகை சமேத இருதயாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.


கும்பாபிஷேக நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட அறநிலையத் துறை இணை கமிஷனர் அனிதா, துணைக் கமிஷனர் சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லதா மேற்கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar