Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரியூர் குண்டம் திருவிழாவுக்காக ... கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு! கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை முத்தாரம்மன் கோயிலை தரம் உயர்த்த வேண்டும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
11:01

உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் நிர்வாகத்தில் செயல்படும் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என அனைத்து சமுதாய மக்கள் நலச்சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். குலசேகரன்பட்டணம் அனைத்து சமுதாய மக்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். துணைச்செயலாளர்கள் குருசாமி, வெங்கடாச்சலம், அமைப்பு செயலாளர் கிஸார் சாகுல்ஹமீது, மகளிர் அணி செயலாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுடலைமணி வரவேற்றார்.கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில் தசரா திருவிழாவில் முதலிடம் வகிக்கிறது. தசரா திருவிழாவின்போது இந்தியா முழுவதும் இருந்து சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகைதருகின்றனர். மேலும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதருகிறார்கள். தற்போது ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் வருகிறது. ஆனால் இக்கோயிலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தரம் உயர்த்தாமல் உள்ளனர். இதனால் கோயிலில் பல அடிப்படையான பணிகள் நடைபெறாமல் உள்ளது. உடனடியாக குலசை முத்தாரம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் நிர்வாகத்தில் செயல்படும் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும். குலசை பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக யாருக்கும் பயன்படாமல் சமூக விரோத செயல் நடைபெறும் இடமாக மாறிவரும் பழுதடைந்த போலீஸ் குடியிருப்புகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பல லட்சம் பக்தர்கள் வரும் இக்கோயிலைச்சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவடைந்த சிறு, குறு விவசாயிகளுக்கு இங்குள்ள தொடக்க கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கி வருகின்றனர். அதனால் இங்குள்ள முத்தாரம்மன் கோயில் உண்டியல் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு பணத்தை தொடக்க கூட்டுறவு வங்கியில் டெப்பாசிட் செய்ய கோயில் அதிகாரிகளை கேட்டுக்கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar