அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இக்கோவிலில் நேற்று, மாசி மாத சனி பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது. இதில், நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
வெள்ளிக்கவசம் அணிவித்து, கோவில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் ஒலிக்க, சங்கொலி முழங்க மஹா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து, நந்தி வாகனத்தில் ஆட்சீஸ்வரரும், இளங்கிளி அம்மனும் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து, அருள்பாலித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.