Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரியூர் கோவிலில் பிரமாண்ட ... ஒரு மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடும் கிராமம்! ஒரு மாதம் பொங்கல் பண்டிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி கோலாகலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2013
10:01

திருத்துறைப்பூண்டி: தஞ்சை, திருத்துறைப்பூண்டி பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜை கோலாகலமாக நேற்று நடந்தது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், முள்ளியாற்றின் வடகரையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் வரதராஜபெருமாள் கோவிலில் விஸ்வரூப, வைராக்கிய ஆஞ்சநேயருக்கு நேற்றுக்காலை சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. மாலை மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.அனுமன் ஜெயந்தியும், அமாவாசையும் ஒரே நாளில் வந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

இதேபோல ராமர்கோவிலில் எழுந்தருளி, அருள்பாலிக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு காலை சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது.பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். தஞ்சையில் வழிபாடு: மேலராஜ வீதியிலுள்ள மூலை அனுமார் கோவிலில், நேற்றுக்காலை முதல் அனுமன் ஜெயந்தி வழிபாடு நடந்தது. காலை, 7.30 மணிக்கு லட்ச ராமநாம ஜெபம் துவங்கியது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், வறுமை, கடன் தொல்லையை போக்கும் தேங்காய் துருவல் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, மாலை, ஆறு மணிக்கு மலரலங்காரம் செய்து, நான்கு ராஜவீதிகளிலும் ஆஞ்சநேயர் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar