நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2026 05:04
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா காப்பு கட்டுதலுடன் நடக்கிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. சக்தி கரகம் எடுக்கப்பட்டு பாரத கதைகள் கூறப்பட்டு வரும் நிலையில், பீம வேஷம் பல்வேறு கிராமங்களில் வலம் வந்தனர். முக்கிய விழாவாக அர்ஜுனன் திரவுபதி திருக்கல்யாணம், சக்கராபுரி கோட்டை வைபவம், துரியோதனன் படுகளம் நடந்தது. இன்று பக்தர்கள் மாவிளக்கு வைத்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை பால்குடம், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர்கள், விழா குழுவினர் செய்தனர்.