Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசஸ்வரர் கோவிலில் ... மாங்காடு சுங்கு விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் மாங்காடு சுங்கு விநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரேமலதா வெற்றிக்காக விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு யாகம்
எழுத்தின் அளவு:
பிரேமலதா வெற்றிக்காக விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு யாகம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
04:04

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா வெற்றி பெற, ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு யாகம் செய்யப்பட்டது.


கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இதற்கு முன்னதாக, 2021 தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட அவர், டிபாசிட் இழந்தார். இந்நிலையில், 2006 தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய விஜயகாந்துக்கு வெற்றியை கொடுத்த விருத்தாசலம் தொகுதியில் பலம் வாய்ந்த கூட்டணியில் போட்டியிடும் பிரேமலதா, இம்முறை வெற்றியை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளார்.


அதன்படி, ‘காசியை விட வீசம் பெருசு விருத்தகாசி’ என்ற ஆன்மிக பெயருடைய விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு யாகம் இன்று நடந்தது. இதற்காக, ராகு காலத்தில், காலை 7:30க்கு மேல், 9:00 மணிக்குள் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடும் வகையில், துர்க்கை அம்மனை வேண்டி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, துணை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். பின்னர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த பிரேமலதா, புதுமண தம்பதிகளுக்கு ஆசி வழங்கினார். முன்னதாக, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் தரிசனம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar