கடற்கரை அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மீன்களை பதப்படுத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டிருந்தனர். இங்குள்ள இன்ஜினியர் ஜோசப் பெஸ்கி வித்தியாசமானவர். காலையிலும், மாலையிலும் செக்யூரிட்டிக்கு வணக்கம் சொல்வார். அவ்வப்போது நலம் விசாரிப்பார். அதனால் ஜோசப்பின் மீது செக்யூரிட்டிக்கு மரியாதை அதிகம்.
ஒருநாள் பணிநேரம் முடிந்த பின்னும் ஜோசப் வேலையில் இருந்தார். அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டதாக நினைத்து அறையை பூட்டி சாவியை செக்யூரிட்டியிடம் ஒப்படைத்தார் அலுவலக உதவியாளர்.
இரண்டு மணி நேரம் கடந்தது. வீட்டுக்கு செல்லலாம் என நினைத்த ஜோசப் கதவை தட்டினார். குளிரூட்டப்பட்ட அறை என்பதால் அவர் எவ்வளவு கத்தியும் வெளியில் கேட்கவில்லை. இந்த நேரத்தில் ‘மாலையில் வணக்கம் சொல்ல ஜோசப் சார் வரவில்லையே’ என நினைத்த செக்யூரிட்டி அவருடைய அறைக்கு சென்றார். கதவை திறந்து பார்த்தபோது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.
மற்றவர்களை மதிப்புடன் நடத்தினால், எப்போதும் உதவி கிடைக்கும்.