Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... பாலமலை ரங்கநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா: வரும் 25ல் துவக்கம் பாலமலை ரங்கநாதர் கோயிலில் சித்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி சித்திரை தேர் திருவிழா 4 ரத வீதிகள் சீரமைக்க திட்டம்
எழுத்தின் அளவு:
அவிநாசி சித்திரை தேர் திருவிழா 4 ரத வீதிகள் சீரமைக்க திட்டம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
04:04

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா வரும் 21-ம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னேற்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயராஜ் தலைமையில் நடந்தது. கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார், டி.எஸ்.பி. கனகசபாபதி, இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, வனிதா, மின்வாரிய உதவி பொறியாளர் சிவசண்முகம், சுகாதார ஆய்வாளர் அரவிந்தன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ராயம்பாளையம், புதுப்பாளையம் சன்னை மிராசுகள் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்:


* பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மொபைல் கழிவறை மற்றும் மருத்துவ முதலுதவி வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

* நான்கு ரத வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள வடக்கு, கிழக்கு ரத வீதி சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.

* அன்னதானம் வழங்கும் மண்டபக் கட்டளைதாரர்கள் உணவு பாதுகாப்புத் துறை சான்றிதழ் பெற்று, தரமான உணவை வழங்க வேண்டும்.

* உணவு கழிவுகள் மற்றும் எச்சில் இலைகளை அந்தந்த மண்டபங்கள் முன்பே சேகரித்து வைக்க வேண்டும்.

* கோவில் நுழைவாயில் சாக்கடை கால்வாய் அருகே தேர் இழுக்கும் பக்தர்கள் விழாமல் இருக்கத் தடுப்புக் கற்கள் அமைக்க வேண்டும்.

* தீயணைப்பு வாகனத்தை கோவில் நுழைவாயில் முன் தயார் நிலையில் நிறுத்த வேண்டும்.

* அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் தேருக்குப் பின்னால் வர வேண்டும்.

* சன்னை போடும் மிராசுகள் போலீசாரால் வழங்கப்படும் அடையாள அட்டையை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar