ஐந்து முகங்கள் கொண்ட பிள்ளையார் ஹேரம்ப கணபதி என்று அழைக்கப்படுகிறார். புதுக்கோட்டை ராஜராஜேஸ்வரி கோயிலிலும், சேலத்துக்கு அருகிலுள்ள கந்தகிரியிலும், திருவானைக்காவிலும் கல்லால் அமைந்த ஐந்து முக விநாயகர் தரிசனம் தருகிறார். சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலிலும், திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலிலும் முகங்கள் வரிசையாக அமைந்த ஐந்து முகப் பிள்ளையாரை வழிபடலாம்.