திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தை கார்த்திகையொட்டி, முருக பக்தர்கள் ஆயிரத்து, 8 காவடி ஏந்தி மாட வீதி உலா வந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தை கிருத்திகையை முன்னிட்டு அருணகிரிநாதருக்கு காட்சி அளித்த கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் முருகப்பெருமான் சன்னதியில் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, என பல்வேறு வகையான ஆயிரத்து, 8 காவடி ஏந்தி வீதி உலா வந்தனர், அப்போது பக்தர்கள் முருகருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். மேலும், கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள முருகப்பெருமானை காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.