Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருணாபுரம் கோவிலில் கூத்தாண்டவர் ... மங்கலதேவி கண்ணகி கோயில் கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசடையும் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
11:04

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளம், போதிய பராமரிப்பின்றி, மாசடைந்து வருவதால், அதை உடனடியாக சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். தெப்ப உற்சவம் ஸ்ரீபெரும்புதூரில், பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகில், இரண்டு ஏக்கர் பரப்பளவில், திருக்குளம் உள்ளது. இக்குளத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து, சிங்கமுக கால்வாய் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. உபரி நீர் வெளியேறவும் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது. திருவிழா காலங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து, கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், இக்குளத்தில் நீராடுவர். பிரம்மோற்சவம் நிறைவு நாட்களில், திருக்குளத்தில், நான்கு நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். அப்போது, ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். குளத்தின் நான்கு கரைப் பகுதியிலும், குடியிருப்புகள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. பக்தர்கள் ஓய்வெடுக்க, திருக்குளத்தின் அருகே, மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது. நாளடைவில், மண்டபம் தனியார் வசம் சென்றது. குளம் மாசுபடுவதை தடுக்க, கோவில் நிர்வாகம் சார்பில், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், சுற்றுச்சுவர் சிதிலமடைந்து உள்ளது. புனிதமாக கருதப்பட்டு வந்த குளத்தில், சுற்றுப் பகுதியில் வசிப்பவர்கள், துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், குளத்து நீர் மாசடைந்து வருகிறது.

தூர்ந்த கால்வாய்: மேலும், ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து குளத்திற்கு வரும், சிங்கமுக கால்வாய், தூர்ந்து விட்டதால், குளத்திற்கு, தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. திருவிழா காலங்களில் மட்டும், பொதுபணித் துறையினர், இதை தற்காலிகமாக சீரமைக்கின்றனர். எனவே, மாசடைந்து வரும் கோவில் குளத்தை தூர்வாரி, உயரமான சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், சிங்கமுக கால்வாய் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar