Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பராயன் கோவில் சித்திரை உற்சவ ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொழுமம் மாரியம்மன் திருவிழா அடிப்படை வசதி செய்யப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
11:04

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே கொழுமம் மாரியம்மன் திருவிழா தொடங்குவதால், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டத்துக்குளம் கொழுமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா இந்த வாரம் துவங்கவுள்ளது. கோடைகாலத்தில் நடக்கும் இந்த விழாவில் ஆண்டுதோறும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இதை தவிர்க்க போதிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர்: இரண்டு கி.மீ, அகல பரப்பில் அமைந்துள்ள கொழுமத்தில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. திருவிழாவின் போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பர். அமராவதி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாத நிலையில் மக்கள் குழாய் நீரை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களின் தாகம் தணிக்கவும், தண்ணீர் தேவையை ஈடுகட்டவும் 10 இடங்களில் "சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவேண்டும்.

பன்றிகளால் சுகாதாரக்கேடு: அமராவதி ஆற்றங்கரையில் பல இடங்களில் குடில்கள் அமைத்து பன்றிகள் வளர்த்து வருகின்றனர். இவைகள் இங்குள்ள தெருக்கள் கோவில், சந்தை மற்றும் முக்கிய இடங்களில் உலா வருவதுடன், சாக்கடைகளில் தங்கி விடுகின்றன. இதே நிலை திருவிழா நாட்களில் நீடித்தால், மக்கள் சுகாதாரக்கேட்டால் நோய்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் திருவிழா நடக்கும் நாட்களிலாவது, பன்றிகளை ஊர்ப்பகுதிக்குள் விடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பார்க்கிங்: திருவிழா நடக்கும் முக்கிய நாட்களில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும். கோவில் பகுதியில் போக்குவரத்து இடைஞ்சல் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தற்காலிக "பார்க்கிங் வசதி செய்யப்பட வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கோவில் வளாகத்தின் முன் ஆண்டுமுழுவதும் இறைச்சி கடைகள் நடந்து வருகின்றன. திருவிழா நாட்களிலும் இந்த கடைகள் செயல்பட அனுமதித்தால், சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன்,கோவில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் ஏற்படும். திருவிழா நாட்களில் இக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்நடவடிக்கையினை ஊராட்சி நிர்வாகத்தினரும், காவல் துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar