Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கருடாழ்வாரின் அம்சமான மதுரகவி ... பரமக்குடியில் மஞ்சள் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார்! பரமக்குடியில் மஞ்சள் பட்டு உடுத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கெடுபிடியின்றி நடந்த மங்கலதேவி கண்ணகி கோயில் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
10:04

கூடலூர்: தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி விழா, எவ்வித கெடுபிடிகளும் இன்றி நடந்தது. தேனி மாவட்டம், கூடலூர் அருகே, தமிழக கேரள எல்லையான பளியன்குடி மலை உச்சியில் அமைந்துள்ளது, மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இதில், தமிழக கேரள பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள். நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்தே கேரளா குமுளியில் இருந்து, 15 கி.மீ., தூரமுள்ள கோயிலுக்கு ஜீப்பிலும், நடந்தும் பக்தர்கள் சென்றனர். பிளாஸ்டிக் பைகள், கேன்களை பறிமுதல் செய்யப்பட்டன. கண்ணகி அம்மன், பச்சைப் பட்டு உடுத்தி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கண்ணகி கோயிலில் தமிழக பூஜாரி பாலாஜி அர்ச்சனை செய்தார். இந்த ஆண்டு சுதந்திரமாக பெண்கள் பொங்கல் வைத்தனர். பெண்களுக்கு மங்கல நாண், வளையல் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு வழிபாடும் பூமாரி விழாவும் நடந்தது. பளியன்குடி வனப்பகுதி வழியாகவும், தமிழக பக்தர்கள் அதிகளவில் நடந்து வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கூடலூரில் இருந்து பளியன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. கோயில் வளாகத்தில் இரண்டு இடங்களில், புதிதாக "இடிதாங்கி வைத்திருந்தனர். கரடிக்குழி அருகே 50 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொல்பொருள் ஆய்வு: மங்கலதேவி கண்ணகி கோயில் வரலாறு குறித்து, தொல்பொருள் ஆய்வுத் துறை கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டு, வரலாற்றை கூறும் சான்றுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். எல்லைப்பகுதி குறித்து ஏற்கனவே பிரச்னை இருப்பதால், இந்த ஆய்வு ரகசியமாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar