Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் மஞ்சள் பட்டு உடுத்தி ... திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கிரிவலம்! திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதிர்ஷ்டம் அளிக்கும் புளிய மரம்: அமர்ந்தால் வெற்றி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
10:04

குடகு: கர்நாடகாவின் வடக்கு பகுதியில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கிராமம் ஒன்றில் உள்ள புளிய மரத்தின் கீழ், சிறிது நேரமாவது அமர்ந்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்; இதனால் தாங்கள் வெற்றி பெறுவதாக அவர்கள் நம்புகின்றனர். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின், ஹேமாரெட்டி என்ற இடத்தில், சுற்றிலும் சிமென்ட் திண்டுடன் கூடிய, புளிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கீழ் சிறிது நேரம் அமர்ந்து, தேர்தல் பிரசாரம் செய்தவர்கள், வெற்றி பெற்றுள்ளதை அறிந்த பிற வேட்பாளர்கள், அந்த புளிய மரத்தின் கீழ், சிறிது நேரமாவது அமர விரும்புகின்றனர்.ஷிராஹட்டி மற்றும் ரோன் சட்டசபை தொகுதிகள், அதைச் சுற்றியுள்ள நகராட்சி, கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்களும், அந்த ராசியான புளிய மரத்தை விடுவதில்லை. வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து, புளிய மரத்தின் கீழ் அமர்ந்து விடுகின்றனர்.

அம்மாநிலத்தின் பிரபல அரசியல் தலைவர்களில் ஒருவர், எஸ்.எஸ்.பாட்டீல். அதிர்ஷ்டக்கார புளிய மரம் அமைந்துள்ள, கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர்; அவரை சந்திக்க வரும் பொதுமக்களை, அந்த புளிய மரத்தின் கீழ் சந்திப்பது தான் வழக்கம்.தன்னை சந்திக்க வருபவர்களுக்கு, அவர், தின்பண்டங்களும், டீயும் கொடுத்து உபசரிப்பதும் உண்டு. அந்த இடத்தையே தன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கும், எஸ்.எஸ்.பாட்டீல் பயன்படுத்தியுள்ளார். போட்டியிட்ட தேர்தல்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதால், அவருக்கு அதிர்ஷ்டம் தந்த புளிய மரம், இப்போது பலருக்கும், அதிர்ஷ்டம் வழங்கும் மரமாக கருதப்படுகிறது.கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கிறது. அதில், போட்டியிடுபவர்கள், புளியமரத்தின் கீழ் அமர்வதை மட்டும் மறப்பதில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar