Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பரமக்குடியில் மஞ்சள் பட்டு உடுத்தி ... திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் கிரிவலம்! திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதிர்ஷ்டம் அளிக்கும் புளிய மரம்: அமர்ந்தால் வெற்றி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
10:04

குடகு: கர்நாடகாவின் வடக்கு பகுதியில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கிராமம் ஒன்றில் உள்ள புளிய மரத்தின் கீழ், சிறிது நேரமாவது அமர்ந்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர்; இதனால் தாங்கள் வெற்றி பெறுவதாக அவர்கள் நம்புகின்றனர். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின், ஹேமாரெட்டி என்ற இடத்தில், சுற்றிலும் சிமென்ட் திண்டுடன் கூடிய, புளிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கீழ் சிறிது நேரம் அமர்ந்து, தேர்தல் பிரசாரம் செய்தவர்கள், வெற்றி பெற்றுள்ளதை அறிந்த பிற வேட்பாளர்கள், அந்த புளிய மரத்தின் கீழ், சிறிது நேரமாவது அமர விரும்புகின்றனர்.ஷிராஹட்டி மற்றும் ரோன் சட்டசபை தொகுதிகள், அதைச் சுற்றியுள்ள நகராட்சி, கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிடுபவர்களும், அந்த ராசியான புளிய மரத்தை விடுவதில்லை. வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு, தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து, புளிய மரத்தின் கீழ் அமர்ந்து விடுகின்றனர்.

அம்மாநிலத்தின் பிரபல அரசியல் தலைவர்களில் ஒருவர், எஸ்.எஸ்.பாட்டீல். அதிர்ஷ்டக்கார புளிய மரம் அமைந்துள்ள, கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர்; அவரை சந்திக்க வரும் பொதுமக்களை, அந்த புளிய மரத்தின் கீழ் சந்திப்பது தான் வழக்கம்.தன்னை சந்திக்க வருபவர்களுக்கு, அவர், தின்பண்டங்களும், டீயும் கொடுத்து உபசரிப்பதும் உண்டு. அந்த இடத்தையே தன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கும், எஸ்.எஸ்.பாட்டீல் பயன்படுத்தியுள்ளார். போட்டியிட்ட தேர்தல்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதால், அவருக்கு அதிர்ஷ்டம் தந்த புளிய மரம், இப்போது பலருக்கும், அதிர்ஷ்டம் வழங்கும் மரமாக கருதப்படுகிறது.கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கிறது. அதில், போட்டியிடுபவர்கள், புளியமரத்தின் கீழ் அமர்வதை மட்டும் மறப்பதில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar