Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் கோயிலில் நடராஜர் அபிஷேகம் மழை பெய்ய வேண்டி மக்கள் நூதன வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 232வது ஜெயந்தி ஆராதனை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2013
11:05

திருநெல்வேலி: பாளை.யில் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 232வது ஜெயந்தி ஆராதனை துவங்கியது. தியாகபிரம்மம் அவர்களின் சீடரும், சங்கீத மேதையுமான வேங்கட ரமணபாகவத சுவாமிகளின் 232வது ஜெயந்தி ஆராதனை மற்றும் 25ம் ஆண்டு வெள்ளிவிழா பாளை.கிருஷ்ணன் கோயில் சவுராஷ்டிரா மகாஜன சபையில் நேற்று துவங்கியது. இதைமுன்னிட்டு வேங்கடரமண பாகவத சுவாமியின் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகளில் ஊர்வலம் நடந்தது. ஐ.ஐ.பி.இ.,பள்ளி தாளாளர் அனந்தராமன் தலைமை வகித்தார். டாக்டர் சவுந்திரராஜன், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் ஜெகதீசன், தமிழ்நாடு பதிவுத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் மாநில பொதுசெயலாளர் அனந்தராமன் முன்னிலை வகித்தனர். வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி கமிட்டி பொருளாளர் ராஜாராம் வரவேற்றார். நிர்மலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். விழாவை ஸ்ரீமன் நாயகி சுவாமிகள் ஆன்மிக இளைஞர் எழுச்சி இயக்க தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மாடவீதிகளின் வழியாக வந்த ஊர்வலம் மீண்டும் கிருஷ்ணன் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இன்று(3ம் தேதி) மதியம் 12.30 மணிக்கு, பாலக்காடு அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனைத்து வித்வான்கள் இணைந்து பங்கேற்கும் கனராக பஞ்சரத்ன கீர்த்தனை ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி இரவு 7 மணிக்கு அக்கரை சகோதரிகளின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar