Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டத்தரசியம்மன் கோவில் ... உச்சி மாகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளத்துப்பாளையத்தில் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2013
10:05

பேரூர்: குளத்துப்பாளையத்தில், அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.மே 19ம் தேதி காலை 5.00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இதன் பின் புண்ணியாக வாகனம், பூர்ணாஹுதி நடத்தப்பட்டு, மாலை 5.00 மணிக்கு விநாயகர் கோவிலிலிருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி, சம்பந்தி சீர்வரிசை எடுத்து வருதல், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி நடத்தப்பட்டு, முதல்கால யாக பூஜைகள் நடந்தது. பின்னர், நவகிரக மூர்த்திகள் பிரதிஷ்டை, சுவாமி விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிம்பசுத்தி அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை 4.00 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, மகாபூர்ணாகுதி, வேதபாராயணம், கடங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும், 6.00 மணிக்கு, விநாயகர் விமான கோபுர கும்பாபிஷேகம், விநாயகர் கும்பாபிஷேகமும், ஸ்ரீமகாலட்சுமி அம்மன் விமானகோபுர கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. காலை 7.00 மணிக்கு, பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள் தலைமையில், ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு மகாகும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை பயபக்தியுடன் தரிசித்தனர். காலை 9.00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு, 10.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூரில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது; வடமாநில மக்களும், தங்கள் பாரம்பரிய ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: உலகத்தை படைக்க கடவுள் விரும்பியபோது இச்சை என்ற சக்தியும் ஞானசக்தியும் தோன்றின. பின் ... மேலும்
 
temple news
நவராத்திரி கொலு மிக விசேஷமாக கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. பல ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சங்கர மடத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மிணி மூலவருக்கு இன்று (28ம் தேதி) சஹஸ்ரநாம ... மேலும்
 
temple news
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடை பெற்று வரும் நவராத்திரி பூஜையில், அம்மன் நேற்று மயூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar