Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாரணாசி மடத்தில் உன்னத நிகழ்ச்சி! குருவித்துறையில் குருபெயர்ச்சி விழா! குருவித்துறையில் குருபெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவுடையம்மன் கோவில் குளம் ரூ.15 லட்சத்தில் சீரமைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2013
10:05

சென்னை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்கவும், படிக்கட்டுகள் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்டவும், 15 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றன. வடசென்னை, திருவொற்றியூரில் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 1998ல், கும்பாபிஷேகம் நடந்தது. 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற நிதி ஒதுக்கப்படாததால், கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

களிமண்:  இதை அடுத்து, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, 13வது நிதிக்குழு மூலம், 45.60 லட்ச ரூபாயும், அரசு மானியம், 21.50 லட்சமும், ஆணையர் பொதுநல நிதி, 9 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், பிற கோவில் நிதி, 18.40 லட்சமும், மற்ற திருப்பணிகள், கோவில் மற்றும் உபயதாரர்கள் நிதி உதவி மூலம், கோவில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருப்பணியுடன், கோவில் குளத்தை சீரமைக்க, இந்து சமய அறநிலைய துறை, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. எவ்வளவுதான் மழை, வெள்ளம் வந்தாலும் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேங்காததால், அதை தடுக்கும் முயற்சியாக, குளத்தில் களிமண் கொட்டி, ஜே.சி.பி., மூலம் பரப்பப்பட்டு வருகிறது.பின், தண்ணீர் தேக்கும் இடங்களை சுற்றி தடுப்பு சுவர் அமைக்கவும், சேதமடைந்த குளத்து படிக்கட்டுகளை, புதிதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம், வரும் மழைக் காலத்திற்குள் பணி முடிந்து, குளம் தயாராகிவிடும் என, கோவில் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆக்கிரமிப்பு
இது குறித்து, பக்தர் ஒருவர் கூறுகையில், "கோவில் குளத்தை சுற்றி, நிலத்தடி நீர்மட்டம், நூறடிக்கு கீழ் சென்று விட்டது. இதனால் தான் தண்ணீர் தேங்குவது அரிதாகிவிட்டது. மேலும், மழைநீர் சேகரிப்பு ஊற்று, முற்றி லும் தூர்ந்து போய்விட்டது. குளத்திற்கு செல்லும் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிரந்தர மாக தண்ணீர் தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். இந்து சமய அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "திருவொற்றியூர் கோவில் குளத்தில் கான்கிரீட்டால் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க, 7.5 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அதேபோல, கோவில் படிக்கட்டு களை புதிதாக கட்டுவதற்கு, 7.5 லட்சம் ரூபாய்க்கான ஒப்பந்தம், வரும் 29ம் தேதி (இன்று) கோரப்படுகிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும், பணி துவங்கும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar