Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காங்கயத்தில் பெருமாள் கோவில் நிலம் ... விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவராக டி.வி.எஸ்., சேர்மன் தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2013
10:06

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அறங்காவலராக, டி.வி.எஸ்., நிறுவனங்களின் சேர்மன் வேணு சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக, அசோக் லேலண்ட் நிறுவன துணை சேர்மன் சேஷசாயி, டாக்டர் சீனிவாசன், ரங்காச்சாரி, கஸ்தூரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் ஒரு மனதாக சேஷசாயியை அறங்காவலர் குழுத்தலைவராக தேர்ந்தெடுத்தனர். அமெரிக்காவில் வசிக்கும் சேஷசாயி, அடிக்கடி ஸ்ரீரங்கத்துக்கு வரமுடியவில்லை என்று காரணம் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். உண்மையில், முதல்வர் ஜெயலலிதா வருகையின்போது, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அவர் வராததும், சேஷசாயி நிறைவேற்றிய, 200க்கும் மேற்பட்ட தீர்மானங்களை கோவில் நிர்வாகம் கண்டுக்கொள்ளாததுமே ராஜினாமாவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் மற்றொரு தொழிலதிபர், டி.வி.எஸ்., நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக தமிழக அரசு நியமித்தது. நேற்று ஸ்ரீரங்கம் வந்த அவர், மூலவர், தாயார் சன்னதிக்குச் சென்று தரிசனம் செய்தார். அறங்காவலர் குழு கூட்ட அரங்கில் புதிய உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, அறங்காவலர் குழுத்தலைவர் தேர்தலை திருச்சி மண்டல கோவில்களின் இணை கமிஷனர் புகழேந்திரன் நடத்தினர். உறுப்பினர்கள் ஒருமனதாக, வேணு சீனிவாசனை அறங்காவலர் குழுத்தலைவராக தேர்ந்தெடுத்தனர். வேணு சீனிவாசனுக்கு, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால், ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் கல்யாணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வேணு சீனிவாசனை அறங்காவலர் குழுத்தலைவராக நியமித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது. ஸ்ரீரங்கம் கோவில் தெப்பக்குளம் உள்ளிட்ட, 6 தெப்பக்குளங்களை, 54 லட்ச ரூபாயில் சீரமைப்பது. ஒரு கோடி ரூபாய் செலவில் அன்னதான கூடமும், 60 லட்ச ரூபாய் செலவில் காத்திருப்போர் கூடமும் கட்டுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் கட்டப்பட்டு வரும் யாத்ரீகா நிவாஸ் கட்டிடத்தை பார்வையிட்டார். ""அறங்காவலர் குழுவை பொறுத்தவரை முதல்வர் ஜெயலலிதாவின் தேர்வு சரியானதாக இருந்தாலும், தொடர்ந்து, வெளிநாடுகளில் வசிப்பவர்களை அறங்காவலர் குழுத்தலைவராக நியமிப்பது கோவிலில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை பாதிக்கும், என்று பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar