Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கையே ... கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலுக்கு அளித்த விலக்கு அறநிலைய துறையின் உத்தரவு செல்லும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2013
11:07

சென்னை: சென்னை, நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கை, அரசு திரும்பப் பெறுவது செல்லும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, நங்கநல்லூரில், பிரசித்திப் பெற்ற, ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை நிர்வகிக்கும், "மாருதி பக்த சமாஜம் அறக்கட்டளை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட மனுவைத் தொடர்ந்து, கோவில் நடவடிக்கைகளில் அரசு குறுக்கிடுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், சில பிரிவுகளில் இருந்தும், விலக்கு அளிக்கப்பட்டது. அறநிலையத் துறை, எங்களுக்கு அளிக்கப்பட்ட விலக்குகளை வாபஸ் பெற்றது. இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதற்கு, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். அரசு தரப்பில், அட்வகேட் - ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர் கந்தசாமி ஆஜராகினர்.

நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், விலக்கு அளித்த உத்தரவில், "கோவிலுக்கு தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு அல்ல என்று கூறப்பட்டுள்ளது. பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகை, கோவில் கணக்கில் பராமரிக்கப்படவில்லை. பெறப்பட்ட நன்கொடை, அர்ச்சனைகளில் இருந்து பெற்ற தொகை, அறக்கட்டளைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. எனவே, அரசு பிறப்பித்த உத்தரவில் நியாயம் உள்ளது. விதிவிலக்கை வாபஸ் பெற, அரசு தெளிவான காரணங்களை கூறியுள்ளது. அந்த உத்தரவை, சட்டவிரோதமானது என, கூற முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar