Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ... காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி கருட சேவை உற்சவம்! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2013
10:07

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, மலைக் குகையில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய, சமணர் கற்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருநகரில் இருந்து, இளநகருக்கு செல்லும் கிராம சாலை அமைந்து உள்ளது. இச்சாலையின் இடது புறத்தில், கிராம முகப்பு அருகே, சிறிய அளவிலான மலைக் குன்று ஒன்று உள்ளது. இங்கு, தரைத் தளத்தில் இருந்து, 5 அடி உயரத்தில், சிறுகுகை உள்ளது. இதில், சமண ஆய்வாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, 10 அகலம், 5 அடி நீளம் கொண்ட, சமண கற்படுக்கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கற்படுக்கையின் மேற்புறத்தில் குறியீடுகள், மருந்து தயாரிப்பதற்கான உரல் போன்ற அமைப்பு, விளக்கு ஏற்றுவதற்கான, 3 குழிகள், படுக்கையின் மேற்கு திசையில், 15 அடி தூரத்தில் பாறை ஒன்றின் மீது, குறியீடுகள் வரையபட்டு இருப்பதும், கிழக்கு திசையில், கற்கால நாகரிகத்தை சேர்ந்த கற்படை வட்டம் ஒன்று உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வு குழுவினர் கூறியதாவது: சமண கற்படுக்கைகள் பொதுவாக தலையணையுடன் காணப்படும். இங்குள்ள கற்படுக்கை தலையணையின்றி உள்ளது. எனவே, இது, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என, கருதுகிறோம். இதன் அருகில், மற்றொரு சிறிய அளவிலான குகை ஒன்று உள்ளது. அங்கு, துறவிகள் தியானம் செய்திருக்கலாம். குகைக்குள் தீர்த்தங்கர் சிலை இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. குகை மண்ணால் புதையுண்டு, சுற்றிலும் புதர்கள் நிறைந்திருப்பதால், அங்கு, ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar