Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஹா...ஆடி.. கிராமங்களில் பண்டிகை காலம்! உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2013
10:07

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்காக , மண்ணின் தன்மை குறித்து அழகப்பா பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 2010 நவம்பர் 22 ல் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் இடத்தில் , காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் சிவநேசன் தலைமையிலான குழுவினர் , மண்ணின் தாங்கும் திறன் குறித்து ஆய்வு செய்தனர். பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் , அறநிலையத்துறை சிவகங்கை மண்டல உதவிக் கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர். பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் கூறுகையில் "" ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுவதற்காக கடந்த 2010ல் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. மதிப்பீடு குறைவாக இருப்பதாக கூறி ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் எடுக்க முன் வரவில்லை. தற்போது முதல்பாகம் (கல்காரம் வரை) கட்டுவதற்கு ரூ.72 லட்சத்தில் புதிய மதிப்பீடு தயார் செய்து , 2013, மே மாதத்தில் டெண்டர் விடப்பட்டு, கமிஷனரின் ஒப்புதலுக்கு, இணை கமிஷனர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கமிஷனரின் உத்தரவு கிடைத்ததும் புதிய ஏழு நிலை ராஜ கோபுரம் கட்டும் பணி துவங்கும், தற்போது அந்த இடத்தில் மண்ணின் தாங்கும் திறன் குறித்து ஆய்வு மட்டும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar