Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்காணிப்பு வளையத்திற்குள் ... சதுரகிரி மலையில் ரூ.30.50 லட்சம்: ஆடி அமாவாசை வசூல்! சதுரகிரி மலையில் ரூ.30.50 லட்சம்: ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதிக்கு பக்தர்கள் வர வேண்டாம்: போராட்டக்காரர்கள் எச்சரிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
10:08

திருப்பதி: திருப்பதி இடம் பெற்றுள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல், இரண்டு நாட்களுக்கு முழு அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. எனவே, இந்த நாட்களில், பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம் என, தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழுவினர் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, பொது வேலை நிறுத்தம், இரு தினங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர மாநிலம் முழுவதும், பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல் வரும், 31ம் தேதி வரை, அனைத்து தனியார் வாகனங்களுக்கும் தடை விதித்து போராட்டம் நடைபெறும் என, ஐ.என்.டி.யு.சி., நேற்று முன்தினம் அறிவித்தது.இதையறிந்த திருமலை தேவஸ்தானம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதன் பின், திருமலையில், பக்தர்கள் வரும் வாகனங்களுக்கு மட்டும், போராட்டக்காரர்கள் அனுமதியளித்தனர். இந்நிலையில், நேற்று, இந்தப் போராட்டம், இரு தினங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக, போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.இதன்படி, ரயில் மற்றும் விமானம் மூலம் வரும் திருப்பதி பக்தர்கள், திருப்பதி ரயில் நிலையம் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து, குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும், தேவஸ்தான இலவச பேருந்துகளில் அலிபிரியை அடையலாம்.அதே போன்று, சந்திரகிரியில் இருந்து, அலிபிரி வரையிலும், தேவஸ்தான இலவச பேருந்துகள் இயக்குவதற்கு, போராட்டக்காரர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

இதுகுறித்து, போராட்டக்காரர்கள் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தான இலவச பேருந்து தவிர, பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்தால், திருப்பதியில் நுழைய விடமாட்டோம். சித்தூர் மாவட்டத்தில், சைக்கிளுக்குக் கூட அனுமதியில்லை.இந்தப் போராட்டத்தில், அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பெட்ரோல் "பங்க்குகள், வங்கிகள், பால் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் கலந்து கொள்கின்றனர். எனவே, பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம்.இவ்வாறு, போராட்டக்காரர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar