பதிவு செய்த நாள்
13
செப்
2013
11:09
திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய்நகரில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு சுப்ரபாதம், 5:15 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது. காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, பாலாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் மதிய ஆரத்தி நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், சந்தியா ஆரத்தி, இரவு, 8:00 மணிக்கு, சேஜ் ஆரதி நடந்தன. முன்னதாக, திருப்பதி சொற்பொழிவாளர் ஆர்.பி.என்., ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இரவு, 8:00 மணி முதல், அதிகாலை வரை, ஓம்சாயி, சாயி ஜெய ஜெய சாயி நாம சங்கீர்த்தனை பஜனைகள் நடைபெற்றன. இதில், 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.