எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் பருவமழை வேண்டி கூட்டுப்பிராத்தனையுடன் சுக்ரபிரதோஷம் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மாலை மகாகணபதி பூஜையுடன் சுக்ரபிரதோஷவிழா துவங்கியது, பருவமழை தப்பாமல் பெய்ய வேண்டி மகாசங்கல்பம் நடந்தது. புண்ணியாவாஜனம் கலச ஆவாகனம், பஞ்சசுத்தஜெபம், திரவியகுதி பூர்ணாகுதி நடந்தது. அதிகாரந்திபகவானுக்கும் எட்டீஸ்வரமூர்த்திக்கும் பெரிய நந்தீஸ்வரருக்கும் 21 வகையான அபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு நிவேதனம் நடந்தது. பக்தர்கள் சோமசூத்ரபிதட்சண வழிபாடு செய்தனர். சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஆனந்த தாண்டவ நடராஜன் சன்னதி முன்பு இரண்டாவது சுற்றில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பன்னீர் அபிஷேகம் நடந்தது. பருவமழை பெய்ய வேண்டி பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் ஏக கால சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானம் மேனேஜர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.