மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அனுதினமும் நடைபெறும் அதிகாலை திருப்பள்ளியெழுச்சியும், இரவு பள்ளியறை பூஜையும் விசேஷம். இங்கு அருளும் சிவனாரை, மாணிக்கவாசகரின் போற்றியல்லாம் முதலாகிய திருவே எனும் பதிகம் பாடி துயிலெழுப்புவர். பிறகு இறைவனை பல்லக்கில் வைத்து, அவரது சன்னதிக்கு அழைத்துச் செல்வர், அதேபோன்று, பள்ளியறை பூஜையின்போது, மீனாட்சியின் சன்னதியில் உள்ள அர்ச்சகர், இறைவனார்க்கு பாத பூஜை செய்து, மலர்களால் அர்ச்சித்து வரவேற்பார்! இந்த பூஜையைத் தரிசிப்போருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைவர் என்பது ஐதீகம்.