Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் ... ரத்தின அங்கி சேவையில் காஞ்சி வரதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் கோவில் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2013
11:12

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் மதில் சுவர் ஓட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, 6 ஆண்டுகளாகியும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இடைவெளியில்லை திருக்கழுக்குன்றம் கோவிலில் பிரமாண்டமான சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி திசைகளிலும், அகலமான சாலைகள் அமைந்திருந்தன. கோவிலைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரை ஆக்கிரமித்து, 12 வீடுகள், 15 கடைகள் கட்டியுள்ளனர். உயரமான கோபுரங்கள் அருகில் ஒரு அடி இடைவெளி கூட இல்லாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. கோவிலை பாதுகாக்க அமைக்கப்பட்ட சுற்றுச் சுவரை, புனரமைக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால், கிழக்கு கோபுரத்தின் எதிரே, நெடுஞ்சாலை குறுகி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுச்சுவரை ஆக்கிரமித்து, சாலை ஓரத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கைவைத்தனர்.

வழக்கு: செங்கல்பட்டு கோட்ட துணை ஆட்சியராக, அமுதா இருந்த போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது சில கடை உரிமையாளர்கள், தங்களுக்கு பட்டா இருப்பதாக கூறி, கடைகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்துஅறநிலையத்துறை ஆகியவை இணைந்து, போதிய அவகாசம் அளித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, தெரிவித்திருந்தது. அதன் பின், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. அதன்பின், 6 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அலுவலர்கள் கவனம் செலுத்தவில்லை.இதனால், பிரசித்த பெற்ற கோவிலின்  சுற்றுச்சுவரை புதுப்பிக்க முடியாமல், கும்பாபிஷேகமும் முடிந்தது.

நெரிசல்: சாலை ஓரத்தில் ஆக்கிரமித்து, கடைகள் கட்டியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவின் படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்ட போது, வருவாய்த்துறை அதிகாரிகள் தான், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளை கேட்ட போது, அறநிலையத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறினர். ஆட்சியர் இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar