Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகருக்கு அருகம்புல் மாலை ... சிவனுக்கு நடராஜர் என பெயர் வந்தது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதில் உறுதி வேண்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
03:12

*தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும் தான் வெல்ல முடியும்.
*தொழிலில் வல்லவனை வெற்றி தேடிவரும். வலிமை இல்லாதவன் தோற்றுப் போவான்.
*மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும். நினைவிலே நல்லது வேண்டும். நோயற்ற உடலும், நூறாண்டு வாழ்நாளும் வேண்டும். அச்சம் இல்லாத அமைதி எப்போதும் மனதில் குடியிருக்க வேண்டும்.
*தன்னை வென்றவனுக்கு மட்டுமே வாழ்வில் பெருமை, வெற்றி, மேன்மை எல்லாம் கிடைப்பது சாத்தியம்.
*பாவத்தை பாவத்தாலேயே வெல்ல நினைப்பது அறியாமை. பாவத்தை புண்ணியத்தால் வெல்ல முயலுங்கள்.
*துணி வெளுக்க உவர் மண் இருக்கிறது. தோல் வெளுக்கச் சாம்பல் உண்டு. ஆனால், மனிதனின் மனதை வெளுக்க மட்டும் வழியில்லை.
*விவேகமே இந்த உலகில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. விவேகமில்லாத மனிதன் பார்வை இழந்தவர் களுக்குச் சமமானவர்கள்.
*திருமண பந்தம் புனிதமானது. அதை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரிகம். விவாகரத்து செய்யும் விஷயத்தில் யாரும் அவசரப்படக் கூடாது.
*எதை மனிதன் விரும்புகிறானோ அதுவே நடக்கிறது. எதை ஆதரிக்கிறானோ அதுவே வளர்ச்சி பெறுகிறது. பேணாத எதுவும் அழிந்து போகும்.
*பணக்கவலையும், மனக்கவலையுமே மனிதனுக்கு நோயாக வெளிப்படுகின்றன.
*விதியின் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் கவலை வேண்டாம். அதை வெல்லும் சக்தி தெய்வபக்திக்கு உண்டு.
*ஆபத்து வரும்போது நடுங்குபவன் மூடன். ஆபத்துக் காலத்திலும் யாருடைய உள்ளம் நடுங்காமல் துணிவுடன் செயலாற்றி, அதை போக்க முயற்சி செய்கிறானோ அவனே ஞானி.
*செல்வம் ஒரே இடத்தில் குவியக் கூடாது. பலரிடமும் பொருள் பரவியிருக்கும்படி செய்வதே மேன்மையானது.
*விதிப்படி இந்த உலகம் நடக்கிறது. மனித வாழ்க்கை இந்த உலகத்தின் வாழ்க்கையிலே ஒரு சிறுபகுதி. விதி தவறி ஒன்றும் நடக்காது.
*விதியை நம்பி, விதை விதைக்காவிட்டால் பயிர் விளைவதில்லை. விதியை நம்பும் அதே நேரத்தில், உழைக்கவும் தயங்கக் கூடாது.
*இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணத்தை நெஞ்சில் பதித்துக் கொண்டு, இன்பமுடன் வாழுங்கள்.
*உள்ளிருக்கும் தத்துவப் பொருள் புரியாமல், வெறுமனே கதை சொல்லி வழிபடுவோருக்கு தெய்வம் வரம் கொடுப்பதில்லை.
*பயம், துயரம், கவலை இல்லாமல் இருந்தால், எந்த காலத்திலும் சாகாமல் நிரந்தரமாக வாழ முடியும்.
*உயிர்களை நேசியுங்கள். தெய்வம் உண்மை என்பதை உணருங்கள். மனதை உறுதிப் படுத்துங்கள். இதுவே வாழும் முறை.
* நீண்டவயது, நோயின்மை, அறிவு, செல்வம் இந்த நான்கும் தந்தருளும்படி கடவுளிடம் மன்றாடிக் கேளுங்கள்.
-பாரதியார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar