Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ஆருத்ரா ... மேல்மருவத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் மீட்பு! மேல்மருவத்தூரில் ரூ.50 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா மகா தரிசனம்: பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
10:12

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தில் நடனமாடி வந்த நடராஜ சுவாமி மகா தரிசனத்தை பல்லாயிரகனக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று முன்தினம் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி அம்பாள் பகல் 12:00 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளினார். அங்கு மண்டகபடிதாரர்களின் தீபாராதனைக்குப் பின் நடை சாத்தப்பட்டது. மாலை 7:00 மணிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் ஆயிரங்கால் உள் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி, திருவாபரண அலங்கார ஊஞ்சல், பிற்பகல் 1:45 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 2:45 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. மாலை 4:45 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர், முன் மண்டபத்தில் ஆனந்த நடனமாடி வரும் ஆருத்ரா மகா தரிசனம் கண்கொள்ளாக் காட்சி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் "சிரசுக்கு மேல் கை கூப்பி வணங்கி கைகளை தட்டி ஓசைகள் எழுப்பியும், "தில்லை அம்பலத்தானே, ஆடல் வல்லானே என கோஷம் எழுப்பி ஆனந்த நடனமாடி சுவாமி தரிசனம் செய்தனர். நடராஜர் 21 படி வாசல் வழியாக ஞானகாச சித்சபைக்கு பிரவேசித்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளை தீட்சிதர்கள் செய்தனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு கால தாமதமானதால், நேற்று முன்தினம் இரவு முதல் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் பசி தாங்க முடியாமல் மயக்கம் ஏற்பட்டு, 2:30 மணிக்கு கோவிலை விட்டு வெளியேறினர். தரிசன உற்சவத்தில் எஸ்.பி., ராதிகா தலைமையில், டி.எஸ்.பி., ராஜாராம், இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், உதயக்குமார் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar