பதிவு செய்த நாள்
03
ஜன
2014
10:01
சென்னிமலை: எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில், நேற்று, பெண்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னிமலை, காங்கேயம் மெயின் ரோட்டில், சென்னிமலை நகரின் காவல் தெய்வமாக விளங்கும், எல்லை மாகாளிஅம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அது முதல் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்து வந்தது. 31ம் தேதி இரவு, கும்பம் பாலித்தலும், நேற்று காலை பொங்கல் விழாவும் நடந்தது. இதில் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலி கொடுத்து வழிபாடு நடத்தினர். இன்று மறுபூஜை, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.