Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் 441 வது ... திருவாரூர் கோவிலுக்குரிய இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்! திருவாரூர் கோவிலுக்குரிய இடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை தெப்பக்குளத்தை பாதுகாக்க இரும்பு கதவு: ரூ.25 லட்சத்தில் அமைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜன
2014
10:01

மதுரை: மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட, மாரியம்மன் தெப்பக்குளத்தை பாதுகாக்க, ரூ.25 லட்சம் செலவில் இரும்பு கதவு அமைக்கும் பணி நடந்து வருகிறது. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் இந்த தெப்பக்குளத்தில், ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத்திருவிழா நடக்கும். இவ்விழா அன்று காலை மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் சுவாமியும் இருமுறை தெப்பத்தில் வலம் வருவர். மையமண்டபத்தில் ஓய்வு எடுத்துவிட்டு, இரவு 8 மணிக்கு மேல், ஒரு சுற்று வலம் வந்து, கோயிலுக்கு திரும்புவர். இதற்காக, தெப்பக்குளத்தில் செயற்கை முறையில் தண்ணீர் நிரப்பப்படும். கடந்த ஆண்டு அதற்கும் வழி இல்லாததால், 50 ஆண்டுகளுக்கு பின், நிலைத்தெப்பத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர். இந்தாண்டிற்குஉரிய விழா, ஜன.,16ல் நடக்கிறது. தற்போதும் நிலைத்தெப்பத்தில்தான் எழுந்தருளுகின்றனர். இதற்கிடையே, வறண்ட தெப்பம், விடுமுறை நாட்களில் விளையாட்டு மைதானமாகவும், இரவு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்கும் வகையில், குளத்தை சுற்றியுள்ள 12 வாசற்படிகளில் இரும்புக்கதவு அமைக்கும் பணி நடந்து வருகிறது.கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், விழா காலங்களில் அதை அகற்றும் வகையில் கதவு அமைக்கப்பட்டு வருகிறது. குளத்தை சுற்றியுள்ள கற்சிலைகள் சீரமைக்கப்பட உள்ளன. குளத்தின் சுற்றுச்சுவர் குறைவாக இருப்பதால், அதிலிருந்து அந்நியர்கள் குதித்து சென்று, வருவது சிரமம். தவிர, ஆடு, மாடுகள் மேய்வது தடுக்கப்படும். இதுபோன்ற காரணங்களால் குளத்தின் புனிதம் காக்கப்படும். தெப்பத்திருவிழாவிற்கு பின், பணி முழுமை அடையும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar