Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி குளத்தில் தண்ணீர் இல்லாததால் ... காரமடை ரங்கநாதர் கோவிலில் வேடுபரி நிகழச்சி! காரமடை ரங்கநாதர் கோவிலில் வேடுபரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் லட்ச தீப விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜன
2014
10:01

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் லட்ச தீப விழா நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் பத்ர தீப விழாவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீப விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுநெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாட்டுடன் லட்ச தீப விழா நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக அலங்கார தீபாராதனையும், மூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சன்னதிகளில் அபி ஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டு வரும் 30ம் தேதி லட்ச தீப விழா வரை தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கும். அன்று நண்பகல் 12 மணிக்கு மகேஷ்வர பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. வரும் 30ம் தேதி அன்று இரவு 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் சன்னதி உள், வெளி பிரகாரங்கள், ஆறுமுகர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரத வீதி வலம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar