Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
6,000 ஆண்டுகள் பழமையான பாண்டு நாகரிகம் ... வேலாயுதசாமி கோவில் தேரோட்டம் நிறைவு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் மரகதலிங்கம் மாயம்: நீதிபதி விசாரணை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2014
11:01

மதுரை: மதுரை குன்னத்துார் சத்திரத்தில் மரகதலிங்கம் மாயமானது குறித்து, போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு: மதுரை குன்னத்துார் சத்திரத்தில் பச்சைநிற மரகதலிங்கம் இருந்தது. அதை திருமங்கலம் அருகேவுள்ள குன்னத்துார் ஜமின்தார் தானமாக வழங்கினார். பராமரிப்பு பணிகள் எனக்கூறி, 2009 ல் சத்திரத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது. மரகதலிங்கம் மாயமானது; மதிப்பு 1000 கோடி டாலர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிங்கப்பூருக்கு கடத்திவிட்டனர். தல்லாகுளம் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். அறநிலையத்துறை இணை கமிஷனர், எங்கள் துறை சார்ந்த ஆவணங்களில், மரகதலிங்கம் பற்றிய குறிப்பு இல்லை. குன்னத்துார் சத்திரத்தில் மரகதலிங்கம் இருந்ததா? இல்லையா? என்பது குறித்த முடிவுக்கு வரமுடியவில்லை, என பதில் மனு செய்தார். நீதிபதி பி.ராஜேந்திரன் முன், நேற்று விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பீட்டர்  ரமேஷ்குமார், மாநகராட்சி தரப்பில் வக்கீல் முரளி ஆஜராகினர். மாநகராட்சி கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனு: குன்னத்துார் சத்திரம் பழுதடைந்ததால், மாநகராட்சி தீர்மானப்படி 2006 ல் இடித்தோம். அங்கிருந்த பொருட்களை ராணி மங்கம்மாள் சத்திரத்திற்கு மாற்றினோம். மங்கம்மாள் சத்திரத்தை 2011 ல் புதுப்பித்தோம். அங்கு 3 இன்ச் உயரமுள்ள பச்சை வண்ண லிங்கம், தாமிர பட்டயம் இருந்தது. மரகதலிங்கம் மாயமானது குறித்து, துணை கமிஷனர் சின்னம்மாள் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்தோம். அக்குழு மாநகராட்சி ஊழியர்கள், குன்னத்துார் சத்திரத்தில் கடை வைத்திருந்தவர்கள் உட்பட 38 பேரிடம் விசாரித்தது. மரகதலிங்கம் இருந்தததாக தெரியவில்லை என 28 பேர், 3 இன்ச் உயரத்தில் லிங்கம் இருந்ததாக 10 பேர் தெரிவித்தனர். அந்த லிங்கத்தை நிபுணர்கள் ஆய்வு செய்ததில் ஸ்படிகலிங்கம், அதன் மதிப்பு 6000 ரூபாய் என உறுதியானது. தாமிர பட்டயத்தை தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மரகதலிங்கம் இருந்ததற்கான குறிப்பு இல்லை என்றனர். ஸ்படிக லிங்கம் மாநகராட்சி வசம் உள்ளது, என குறிப்பிட்டார். நீதிபதி, மனுதாரர் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தல்லாகுளம் போலீசார் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar