Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதியம்மன் கோவில் மகா ... ரத சப்தமி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருத்தேர் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2014
11:02

சேந்தமங்கலம்: நைனாமலை வரதராஜ பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள், சோமேஸ்வர ஸ்வாமி கோவிலில், திருத்தேர் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது நாமக்கல், சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் சோமேஸ்வர ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசிமக தேர்த்திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 9.15 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (ஃபிப்., 8) துவங்கி, ஃபிப்ரவரி, 14ம் தேதி வரை, தினமும், காலை, 10.30 மணிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி சிம்மம், மயில், கருடன், பூதம், ரிஷபம், யானை, குதிரை போன்ற வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஃபிப்ரவரி, 15ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து, மாலை, 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஃபிப்ரவரி, 16ம் தேதி தேர் நிலை சேர்கிறது. 17ம் தேதி, காலை, 10 மணிக்கு, சோமேஸ்வரர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு, கைலாச வாகனத்தில், ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18ம் தேதி, காலை, அபிஷேகமும், இரவு, 8 மணிக்கு வெள்ளி பல்லக்கில் ஸ்வாமி எழுந்தருளுகிறார். 19ம் தேதி, காலை, 10 மணிக்கு அபிஷேகமும், இரவு, 8 மணிக்கு விடையாத்தி உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar