Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசானி அம்மன் கோவிலில் ... வெட்டுடையார் காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோட்டையில் வெங்கட்ரமணர் சிலை பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மார்
2014
10:03

செஞ்சி: செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் சிலை பிரதிஷ்டை குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டையில் மிகப் பெரிய வெங்கட்ரமணர் எனும் திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இக் கோவிலை இந்திய தொல்லியல் துறை  பராமரிக்கிறது. இங்கு வழிபாடு நடத்துவதை தடை செய்யக் கூடாது என செஞ்சியை சேர்ந்த ராமச்சந்திர ராமானுஜதாசர், சீத்தாராமன், பூங்காவனம், உத்தரவேல், தேவராஜ், பொன்னுசாமி ஆகியோர், செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். வழக்கறிஞர்கள் பூபதிபிள்ளை, ராஜேந்திரன், கண்ணதாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆஜராகி, வாதாடினர். மனுவை பரிசீலித்த நீதிபதி வெங்கடேசன், மனுதாரர்கள் மற்றும் இந்து வழிபாட்டு பொது மக்கள் வெங்கட்ரமணர் கோவிலில் விக்ரகங்கள் வைத்து, காலை 8.00 மணி முதல் மாலை 5.௦௦ மணி வரை தினமும் வழிபாடு செய்ய, இம்மாதம் 14ம் தேதி வரை தடையோ, இடைஞ்சலோ செய்யக் கூடாது என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். நேற்று பகல் 2.00௦௦ மணிக்கு, செஞ்சி பகுதியை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் மற்றும்  பொது மக்கள் இந்திய தொல்லியல் துறை அலுவலகம் எதிரிலிருந்து ஊர்வலமாக வெங்கட்ரமணர் கோவிலுக்கு சென்றனர். கருவறையில் வெங்கட்ரமணர், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாஷ்வார், பலி பீடம் ஆகியவற்றை வேதாகம விதிப்படி பிரதிஷ்டை செய்து, தீபாராதனை செய்தனர். கணேஷ்குமார் எம்.எல்.ஏ., உட்பட வெளிநாட்டு பக்தர்களும் தரிசனம் செய்தனர். அதையடுத்து, செஞ்சி கோட்டை பராமரிப்பு அலுவலர் வரதராஜசுரேஷ்,  செஞ்சி போலீசில் கொடுத்த புகாரில், ராமச்சந்திர ராமானுஜதாசர், சீத்தாரமன், பூங்காவனம், உத்தரவேல், தேவராஜ், பொன்னுசாமி  ஆகியோர், கோட்டை ஊழியர் மகாலிங்கத்தை  பணி செய்ய விடாமல் தடுத்து, கோவில் பூட்டை உடைத்து, சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியதாக கூறி உள்ளார். இப்புகார் மீது, செஞ்சி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி ... மேலும்
 
temple news
திருப்பதி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar