சேலம்: சேலத்தில் சவுடேஸ்வரி அம்மன் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. சேலம் அரிசிபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் உற்சவர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.