Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாவுக்கரசர் கோவிலில் அப்பர் சதய ... பழநி கோவில் பழநி கோவில் "ரோப்கார் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வறண்ட வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிலை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
10:04

ஆண்டிபட்டி: நீர்வரத்து இல்லாததால், வைகை அணை வற்றி வருகிறது. இருப்பில் உள்ள நீரை, இன்னும் சில நாட்களே பயன்படுத்த முடியும் என்ப தால், மதுரை சித்திரை திருவிழா வில், கள்ளழகர், வறண்ட வைகை ஆற்றில் இறங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை குறைவு : வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில், கடந்த ஆண்டு, தேவையான மழை பெய்யவில்லை. மழை குறைவால், அணை நீர்மட்டம், 60 அடி ஆனது. அணையின் நீர்மட்டம், 71 அடி. அணையில், இருப்பில் உள்ள நீரை, குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இருப்பில் உள்ள நீரை, தேனி, மதுரை உட்பட, ஐந்து மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு, இன்னும் சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அணையில் மண்படிவு அதிகம் இருப்பதால், 20 அடிக்கு கீழ் உள்ள நீரை மதகு வழியாக வெளியேற்றி பயன்படுத்த முடியாது. நேற்று, வைகை அணை நீர் மட்டம், 24.02 அடியாக இருந்தது. பல மாதங்களாக, அணைக்கு நீர் வரத்து இல்லை. மதுரை, சேடபட்டி, -ஆண்டிபட்டி குடிநீருக்காக, வினாடிக்கு, 40 கன அடி வெளியேற்றப்படுகிறது. பெரியாறு அணை நீர் இருப்பும் கவலை அளிப்பதாகவே உள்ளது.

குடிநீருக்கே சிக்கல் :
மே 14ல் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, பெரியாறு, வைகை அணையில் இருந்து, வழக்கமாக கூடுதல் நீர் திறந்து விடப்படும். தற்போதுள்ள சூழலில், குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, தண்ணீர் திறப்பது சாத்தியமே இல்லாததால், கள்ளழகர் வறண்டு போன வைகையில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar