Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் அக்னி நட்சத்திர விழா: 300 ... திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்டம்! திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனந்த சரஸ் புஷ்கரணியில் காஞ்சி வரதராஜ பெருமாள் தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மே
2014
10:05

காஞ்சிபுரம் : பக்தர்கள் வெள்ளத்தில், அனந்த சரஸ் புஷ்கரணியில் வரதராஜ பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 12ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஒன்பதாம் நாள் உற்சவமாக நேற்று காலை, 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள் பல்லக்கில் வீதியுலா சென்றார்.மீண்டும் காலை 9:30 மணிக்கு கோவிலை வந்தடைந்த, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் 10:00 மணிக்கு கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, சிறப்பு ஆராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் நடந்தன.அதன்பின், பகல் 10:50 மணிக்கு பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்ற வரதர், நீராழி மண்டபத்தின் எதிரே உள்ள மண்டபத்திற்கு வந்தார். அங்கு, வரதர் முன்னிலையில், அனந்த சரஸ் புஷ்கரணிக்கு, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட தயிர் சாதம், பிரசாதமாக வீசப்பட்டது. பின்னர், உற்சவர் வரதராஜ பெருமாள் அனந்த புஷ்கரணியில் இறங்கினார். சுவாமியை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா என, கூறியவாறு குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.சில நிமிடங்களில் அனந்த சரஸ் புஷ்கரணியில் மூழ்கி, வெளியே வந்த வரதராஜ பெருமாள், உற்சவ அறைக்கு புறப்பட்டு சென்றார். தீர்த்தவாரி உற்சவத்தை காண காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்ததனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar