Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி ... வயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள்மலை பிரம்மோற்ஸவ தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
03:06

துறையூர்: துறையூர் பெருமாள்மலை பிரம்மோற்ஸவ திருவிழாவையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமியை வழிபட்டனர்.திருச்சி மாவட்டம், தென் திருப்பதி துறையூர் பெருமாள்மலையில் பிரம்மோற்ஸவ திருவிழா, கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் காலையில், பல்லக்கிலும், இரவில் அன்னம், சிம்மம், ஹனுமந்த, சேஷ, கருட, யானை வாகனங்களில், ஸ்வாமி கிரிவல பாதையில் பவனி வந்தார்.கடந்த, 9ம் தேதி காலை, செங்குந்தர் சமூகம் சார்பில், ஸ்வாமி திருக்கல்யாணம் நடந்தது. இரவு ஸ்வாமி இந்திர விமானத்தில் வலம் வந்தார். நேற்று முன்தினம் காலை, பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும் ஸ்வாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, ஒன்பது மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் வீற்றிருந்தார்.தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜாத்தி, முன்னாள் எம்.எல்.ஏ., அரங்கராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விஜயராகவன், யூனியன் தலைவர் பிச்சையம்மாள், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், அரசு வக்கீல் செந்தில்குமார், நகராட்சி தலைவர் முரளி, கோவில் செயல்அலுவலர் சீனிவாசன், ஏழு கிராம முத்திரையர் பிரதிநிதிகள் உட்பட பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்தனர். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, வெங்கட்டரமணா கோவிந்தா என கோஷமிட்டபடி, தேரில் வீற்றிருந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதியை வழிபட்டனர்.தேரோட்டத்தையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீயணைப்பு துறையினர், பொதுசுகாதார துறையினர் திருவிழாவில் முகாமிட்டு சேவை செய்தனர்.அரசியல் பிரமுகர்கள் புறக்கணிப்புதிருவிழாவுக்கான அழைப்பிதழில் அமைச்சர் பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், எம்.பி.,க்கள் ரத்தினவேல், மருதைராஜா, இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் என பெயர்கள் இடம் பெற்று இருந்தது. அவர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar