தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2014 01:06
திண்டிவனம்: தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 4 ம் தேதி பிரம்மோற் சவ விழா துவங்கியது. விழாவையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கடக லக்கனத்தில் தேரோட்டம் நடந்தது. பின், இன்று காலை 9.05 மணிக்கு ஹோமம், திருமஞ்சனம், உள்புறப் பாடு, சாந்தி ஹோமம், மகாபூர்ணாஹூதி மற்றும் இரவு 7 மணிக்கு சந்திர பிரபை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா நாமக்கார முனுசாமி செய்திருந்தார்.