லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2014 11:07
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மங்கலம்பேட்டை லட்சுமி நாரா யண பெருமாள் கோவில் ஐந்தாம் ஆண்டு சம்ப்ரோஷண விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. இதையொட்டி அன்று காலை 6:00 மணியளவில் சுதர்சனம் ஹோமம், விஜய ஆஞ்சநேயர், லட்சுமி நாராயண பெருமாள், விஷ்ணு துர்க்கை மற்றும் கருடாழ்வார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடந் தது. தொடர்ந்து, நேற்று காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.