Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா; ... ஆடிப்பெருக்கு: கோயில்களில் வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த முனியப்ப சுவாமி கோவில் !
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2014
01:08

ஈரோடு: பல ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்துள்ள முனியப்ப சுவாமி கோவிலில்,
திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஈரோடு தாலுகா, மொடக்குறிச்சி கிராமம், ஊஞ்சப்பாளையத்தில் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது. கிராம காவல் தெய்வமாக, இன்றளவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.முதல்வரின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், தினமும் காலை, ஏழு மணி முதல், ஒன்பது மணிக்குள், ஒரு கால பூஜை நடக்கிறது. கோவிலில், நான்கு ஆண் முனியும், ஒரு பெண் முனியும், கருப்பண்ண சுவாமி சிலைகளும் உள்ளன.ஆண்டுதோறும், ஆடி பெருக்கு முடிந்த பின் வரும் வியாழக்கிழமை, இக்கோவிலில் கிடா வெட்டு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பிற நாட்களில், கோவிலில் கிடா வெட்ட அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும்,
சிவராாத்திரி பூஜை, அதாவது தை மாதம் அறுவடை முடிந்த பின், நெல்மணிகளை பெற்று,
அரிசியாக்கி, பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையல் இடுகின்றனர். பின்னர், பொங்கலை
உருண்டையாக பிடித்து, கிழங்கு மற்றும் பயிர் வகைகளை, உப்பு போடாமல் சேர்த்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.கால மூப்பின் காரணமாகவும், திருப்பணிகள் செய்யாததாலும், கோவிலில் சுவாமி சிலைகள் சிதிலமடைந்து உள்ளன. எந்த நேரத்திலும், சுவாமி சிலைகள் இடிந்து, கீழே விழக்கூடும் என்ற அபாயம் தொடர்கிறது. கன மழை பெய்யும் பட்சத்தில், சுவாமி சிலைகள் பாதிக்கப்படைய கூடும்.சுவாமி சிலைகள் சிதிலமடைந்து வருவதால், பக்தர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள, அதிக செலவாக கூடும். செலவை ஏற்க முடியாத நிலையில், மக்கள் உள்ளனர். பருவ மழை பொய்த்ததால், மக்களால் கோவிலை பராமரிக்கவோ, திருப்பணிகளை மேற்கொள்ளவோ முடியாத நிலை உள்ளது.எனவே, இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய, அறநிலையத்துறை மூலம், அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு
செய்ய வேண்டும், என்று பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து
எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்டோரிடம் மனு கொடுக்க தயாராகி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar