Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா; ... ஆடிப்பெருக்கு: கோயில்களில் வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த முனியப்ப சுவாமி கோவில் !
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2014
01:08

ஈரோடு: பல ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்துள்ள முனியப்ப சுவாமி கோவிலில்,
திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஈரோடு தாலுகா, மொடக்குறிச்சி கிராமம், ஊஞ்சப்பாளையத்தில் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது. கிராம காவல் தெய்வமாக, இன்றளவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.முதல்வரின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், தினமும் காலை, ஏழு மணி முதல், ஒன்பது மணிக்குள், ஒரு கால பூஜை நடக்கிறது. கோவிலில், நான்கு ஆண் முனியும், ஒரு பெண் முனியும், கருப்பண்ண சுவாமி சிலைகளும் உள்ளன.ஆண்டுதோறும், ஆடி பெருக்கு முடிந்த பின் வரும் வியாழக்கிழமை, இக்கோவிலில் கிடா வெட்டு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பிற நாட்களில், கோவிலில் கிடா வெட்ட அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும்,
சிவராாத்திரி பூஜை, அதாவது தை மாதம் அறுவடை முடிந்த பின், நெல்மணிகளை பெற்று,
அரிசியாக்கி, பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையல் இடுகின்றனர். பின்னர், பொங்கலை
உருண்டையாக பிடித்து, கிழங்கு மற்றும் பயிர் வகைகளை, உப்பு போடாமல் சேர்த்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.கால மூப்பின் காரணமாகவும், திருப்பணிகள் செய்யாததாலும், கோவிலில் சுவாமி சிலைகள் சிதிலமடைந்து உள்ளன. எந்த நேரத்திலும், சுவாமி சிலைகள் இடிந்து, கீழே விழக்கூடும் என்ற அபாயம் தொடர்கிறது. கன மழை பெய்யும் பட்சத்தில், சுவாமி சிலைகள் பாதிக்கப்படைய கூடும்.சுவாமி சிலைகள் சிதிலமடைந்து வருவதால், பக்தர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள, அதிக செலவாக கூடும். செலவை ஏற்க முடியாத நிலையில், மக்கள் உள்ளனர். பருவ மழை பொய்த்ததால், மக்களால் கோவிலை பராமரிக்கவோ, திருப்பணிகளை மேற்கொள்ளவோ முடியாத நிலை உள்ளது.எனவே, இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய, அறநிலையத்துறை மூலம், அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு
செய்ய வேண்டும், என்று பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து
எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்டோரிடம் மனு கொடுக்க தயாராகி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar