ராசிநாதனான சனி, அவரோடு இணைந்திருக்கும் செவ்வாய் இருவராலும் நன்மை குறைந்தாலும், செப்.1 க்கு பிறகு செவ்வாய் சாதகமான இடத்திற்கு வருவதால் நன்மை அதிகரிக்கத் தொடங்கும். புதன் சிம்மத்தில் இருப்பதால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். ஆக. 26-ந் தேதி கன்னி ராசிக்கு செல்வதால் வேண்டாத பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலம் பாதிக்கப்படலாம். சுக்கிரன் 7 ல் இருப்பதால் பெண்களால் தொல்லை வரலாம். செப். 1ல் சிம்மத்திற்கு இடம் மாறுவதால் வசதி வாய்ப்பு பெருகும். குடும்ப மகிழ்ச்சி நிலைக்கும். 3ல் உள்ள கேது தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் மேம்படும்.குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் சீரான வருவாயைக் காணலாம். எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். பெண்கள் வகையில் இருந்து வரும் பிரச்னை ஆகஸ்டு 26க்கு பிறகு மறையும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். ஆக. 26க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோரிக்கைகளை காலம் நேரம் பார்த்து கேட்டு பெறவும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். செப். 1க்கு பிறகு பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சமூக நல சேவகர்கள்
அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் தற்போது சிறப்பான பலனையே அனுபவித்து வருகிறீர்கள். ஆக. 26க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதுஇருக்கும்.
விவசாயிகள் அநாவசிய செலவைக் குறைப்பது நல்லது. செப். 1 க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
நல்ல நாள்: ஆக. 20,21,22,23,24,30,31, செப். 1,2,3 6,7,10,11