Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ரூ.70 லட்சம் மதிப்பில் மேற்கூரை! திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ரூ.70 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஆஞ்சநேயர் ஆரத்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
11:08

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஆஞ்சநேயர் சுவாமி ஆரத்தி அளிக்க, தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.திருமலை ஏழுமலையானுக்கு, அடுத்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. அதில், ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள, பேடி ஆஞ்சநேயர் சுவாமி உற்சவ மூர்த்திக்கு ஆரத்தி அளிக்க, ஆகம பண்டிதர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏழுமலையான் கோவில் அக்னி மூலையில் உள்ள, கொலு மண்டபத்தை (சஹஸ்ர தீப அலங்கார சேவை நடத்தும் இடம்) 100 மீட்டர் தள்ளி அமைத்துள்ளனர். இதையடுத்து, கோவில் முன் இருந்த, மூத்த குடிமக்கள் காத்திருப்பு வரிசையை, தெற்கு மாடவீதியில் மாற்ற உள்ளனர். இதனால், கோவில் முன் விசாலமான இடம் கிடைக்கும். பிரம்மோற்சவ சமயத்தில், மாலை ஊஞ்சல் சேவை நடைபெற்ற பின், வாகன சேவை நடத்த உற்சவ மூர்த்திகள் வாகன மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுவர். அப்போது, உற்சவ மூர்த்திகளுக்கு பேடி ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள அகண்டம் முன், ஆரத்தி அளிக்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்காக, வைகானச ஆகம பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த ஆண்டு இதே போல், வைகானச ஆகம பண்டிதர்களுடன் ஆலோசித்து, திருமலையில் உள்ள புஷ்கரணியில், தினமும் மாலை வேளையில், தேவஸ்தானம் ஆரத்தி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar