மதுரை:ஆரியன்காவு ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீபுஷ்கலா தேவி திருக்கல்யாணம் டிச.,26 இரவு 9 மணிக்கு நடக்கிறது.டிச.,24ல் ஆரியங்காவு அருகில் உள்ள மாம்பழத்துறை ஸ்ரீபகவதி அம்மன் கோயிலில் மணமகள் அழைப்பு ஊர்வலம். டிச.,25ல் ஆரியன்காவு கோயிலில் பாண்டியன் முடிப்பு மற்றும் நிச்சயதார்த்தம். டிச.,26ல் ஆரியன்காவு கோயிலில் இரவு 9 மணிக்கு ஸ்ரீதர்மசாஸ்தா- ஸ்ரீபுஷ்கலா தேவி திருக்கல்யாணம். டிச.,27 ல் மண்டலாபிஷேகம் நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து மதியம் 2 மணிக்கு மண்டல பூஜை நிறைவடைகிறது.