பொள்ளாச்சி:கேரளா பாலக்காடு மாவட்டம், சித்தூர் வட்டம் மூங்கில்மடை ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இது 22ம் ஆண்டு பூஜையாகும். இதில், காலை 5.00 மணிக்கு மூங்கில் மடையில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீர்த்தம் விடப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. அடுத்து மாலை 4.00 மணிக்கு கோபாலபுரம் ஐயப்பன் கோவிலில் இருந்து யானை ஊர்வலம், விளக்கு பூஜை மற்றும் நெல்பறை எடுக்கும் சாங்கியம் நடந்தது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் கன்னி சாமிகள் எனப்படும் சிறுவர்களால் விளக்குகள் வைத்து ஐயப்பனுக்கு திருவிளக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (20ம் தேதி) காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அடுத்து வரும் 23ம் தேதி சிறப்பு அபிேஷக பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.