Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் ... சரநாராயண பெருமாள் முத்தங்கி சேவையில் அருள்பாலிப்பு! சரநாராயண பெருமாள் முத்தங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இலவச தரிசனத்தை ரத்து செய்து பக்தர்களிடம் கட்டாய வசூல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 டிச
2014
12:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று, இலவச தரிசனத்தை ரத்து செய்துவிட்டு, மொழி தெரியாத வெளி மாநிலங்களைச்  சேர்ந்த பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் நகரில் உள்ள பாரம்பரியமிக்க கோவிலாகவும், 108  திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களில்  இருந்து வந்து செல்கிறார்கள்.  ஏமாற்று வேலை தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்து?ர் சித்தர் பீடத்திற்கு, ஆந்திரா மற்றும்  கர்நாடகா மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.  பின், ஊருக்கு திரும்பும் வழியில், காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் தரிசனம் செய்ய வருகின்றனர்.

அவ்வாறு வரும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்களுக்கு, உள்ளூர் கோவில் நிலவரம் தெரிவதில்லை. தமிழ் அறியாத அவர்களை ஏமாற்றும்  வகையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, ‘பெருமாள் சகஸ்ரநாமம்’ என, ஐந்து ரூபாய் சூலிக்கப்பட்டது. அதிகாலை முதல் பி ற்பகல் வரை பல ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு இலவச தரிசனம் பற்றி தெரியவில்லை. மேலும், பல்லி  தரிசனத்திற்காக தனியாக 2 ரூபாய் வசூலிக்கப்பட்டது. பிற்பகல் வரை இலவச தரிசனம் அனுமதிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.  உள்ளூர் பக்தர்கள் சிலர், நேற்று பிற்பகல் கோவிலுக்கு வந்தபோது, கட்டணம் வசூலிப்பது குறித்து, கோவில் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இதுபற்றிய தகவல் கோவில் செயல் அலுவலருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து, வரதராஜ பெருமாள்  கோவில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, “கோவில் நிர்வாகி சிலரிடம், இதுபோன்று வசூல் செய்யக்கூடாது என எச்சரித்துள்ளேன். மீண்டும் இதுபோன்று சிலர் செயல்படுவதால், பக்தர்களிடம் வசூல் செய்யாதவாறு நடவடிக்கை எடுக்கிறேன்,” என்றார்.

பக்தர்கள் கேள்வி: கோவில் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘கோவிலுக்கு வருவாயாக கிடைக்கும் வகையில் பல ஏக்கர்  நிலமும், உண்டியல் வருவாயும் உள்ளது. அப்படி இருக்கும்போது, மொழி தெரியாமல் சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களை ஏமாற்றி கட்டாய  பண வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம்?’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar