Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி தெப்பத்திருவிழா: ... வீரமுடையாநத்தம் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை! வீரமுடையாநத்தம் ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இப்பவோ... அப்பவோ... விட்டில் ராஜ பெருமாள் கோவில்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
11:01

உத்திரமேரூர்: சாத்தணஞ்சேரியில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும், விட்டில் ராஜ பெருமாள் கோவில், இப்பவோ... அப்பவோ... என. இடியும் அபாயத்தில் உள்ளது. இதை சீரமைத்திட, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தணஞ்சேரி கிராமத்தில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த விட்டில் ராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 500 ஆண்டுகளுக்கு முந்தைய, இக்கோவிலில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று, புகழ்பெற்ற வழிபாட்டு தலமாக இருந்து வந்தது. காலப்போக்கில், இப்பகுதியைச் சேர்ந்தோர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததைத் தொடர்ந்து, கோவில் பராமரிப்பின்றி போனது. கோவிலில் இருந்த உற்சவர் மற்றும் ஐம்பொன் சிலைகள், பாதுகாப்பு கருதி, சீட்டஞ்சேரியில் உள்ள காளீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இக்கோவில் கட்டட பகுதியில் ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும், ஒரு சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும் சிதிலமடைந்து வருகிறது. கோவிலின் கோபுர பகுதி மற்றும் கோவில் மேற்பகுதிகள் முழுவதும் மரக்கன்றுகள் வளர்ந்து, புதர் போல காட்சியளிக்கிறது. எனவே, பராமரிப்பின்றி சீரழிந்து வரும் பழமையான இக்கோவிலை சீரமைத்து பாதுகாத்திட, இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்து சமய அறநிலைய துறை அதிகாரி கூறுகையில், கோவில் பராமரிப்புக்காக 18 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரித்து, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar