Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கர்நாடக ஸ்ரீமலை மாதேஸ்வரன் கோவிலில் ... திருப்பரங்குன்றம் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் இரு இடங்களில் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2015
02:02

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மற்றும் பொது தீட்சிதர்களின் தில்லை
நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், நாட்டியாஞ்சலி விழா இரண்டு இடங்களில் நேற்று துவங்கியது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரம் தெற்கு வீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில், நேற்று மாலை 6:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கி, முதல் நிகழ்ச்சியாக பெங்களூரு நடராஜா ஆர்ட்ஸ் அகாடமி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. துவக்க விழாவிற்கு, நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலர் சம்பந்தம் வரவேற்றார். முக்கிய பிரமுகர்கள், முன்னணி நடன கலைஞர்கள் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து, நாட்டியக் கலைஞர்களின் பரதம், குச்சுப்புடி, நாட்டிய நாடகம் நடந்தது.
ஏற்பாடுகளை, நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலர் சென்னை டாக்டர்
நாகசுவாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மற்றொரு நாட்டியாஞ்சலி:பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், முதல் நாட்டியாஞ்சலி விழா கிழக்கு கோபுரம் அருகில், நேற்று மாலை 4:00 மணிக்கு நாதஸ்வர இசையுடன் துவங்கியது. துவக்க விழாவிற்கு, நடராஜர் கோவில் பொது தீட்சிதர் செயலர் பாஸ்கர தீட்சிதர் தலைமை தாங்கினார். நிர்வாகி குப்புசாமி தீட்சிதர் வரவேற்றார். முன்னணி நடன கலைஞர் பத்மா சுப்ரமணியன், நந்தினி ரமணி, திருவாரூர் பக்தவச்சலம், ஜெயப்ரியா விக்கிரமன் உள்ளிட்ட நடன கலைஞர்கள் வாழ்த்திப் பேசினர். பொது தீட்சிதர்கள் சார்பில் நாட்டிய கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் செயலர் அய்யப்ப தீட்சிதர் நன்றி கூறினார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலியில் நேற்று அதிகாலை, 5:00 மணி வரை பரத
நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரண்டு இடங்களிலும் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில், வெளிநாட்டினர் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சிகளை ரசித்தனர். இரண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும், வரும் 21ம் வரை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar