Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதையில் மாசி மகப் பெருவிழா ... திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்! திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலை ரசிப்பதில் சிக்கல்: தடையை ஏற்படுத்தும் மின் கட்டணம்!
எழுத்தின் அளவு:
கைலாசநாதர் கோவிலை ரசிப்பதில் சிக்கல்: தடையை ஏற்படுத்தும் மின் கட்டணம்!

பதிவு செய்த நாள்

24 பிப்
2015
11:02

காஞ்சிபுரம்: மின் கட்டணத்தை காரணம் காட்டி, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் மின்விளக்குகள், இரவு வேளைகளில் ஒளிருவதில்லை. இதனால், மின் ஒளியில் கோவிலின் அழகை, சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

பாரம்பரிய சின்னம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், கி.பி.,7ம் நூற்றாண்டில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த ராஜசிம்மன் என்ற அரசனால் கட்டப்பட்டது. இதன் கலை சிறப்பால், பழம்பெரும் உலக பாரம்பரிய சின்னமாக, இந்த கோவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல்லவர்களின் கட்டுமான கலைக்கு சான்றாக விளங்கும் இந்த கோவிலை காண, நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஆயிரக்கணக்கான அண்டை மாநிலவாசிகளும் வந்து செல்கின்றனர். அந்தி நேரத்திலும், இரவிலும் கோவில் கலை அழகை ரசிப்பதற்கு வசதியாக, பசுமையுடன் கூடிய புல்வெளியுடன் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

மின் விளக்குகள்:
இந்நிலையில், கோவிலை சுற்றியுள்ள மின் விளக்குகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், இரவு நேரங்களில் எரிகின்றன; மற்ற ஐந்து நாட்களிலும், அனைத்து விளக்குகளும் அணைத்து வைக்கப்படுகின்றன. இதனால், இரவு வேளைகளில் கோவில் அழகை சுற்றுலாப் பயணிகளால் ரசிக்க முடியவில்லை. இதுகுறித்து, கைலாசநாதர் கோவிலின் தொல்லியல் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ஏற்கனவே, கோவில் வளாகத்தில் உள்ள புல் தரைக்கு தண்ணீர் பாய்ச்சுவதால் மின் கட்டணம் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், இரவு முழுவதும் மின் விளக்குகள் எரிந்தால், அதிக மின்கட்டணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். அதிக மின் கட்டணம் வந்தால், தொல்லியல் துறையின் உயரதிகாரிகளுக்கு நாங்கள் பதில் சொல்ல நேரிடும், என்றார்.

சுற்றுலா பயணிகள்:
கோவில் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள், இரவு வேளையின் ரம்யத்தை உணராமலேயே திரும்புகின்றனர். எனவே, வாரத்தின் அனைத்து நாட்களிலும், கோவிலைச் சுற்றியுள்ள மின்விளக்குகள் எரிய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: வைணவ திருக்கோவில்களில் "பாஞ்சராத்ர மற்றும் "வைகானசம் என இரண்டு ஆகம விதிகள் ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில், நவ., 23ம் தேதி வரை, மரக்கன்று ... மேலும்
 
temple news
தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மகாளய பட்ச புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு குன்னத்துார்மேடு கிருஷ்ணர் மற்றும் பாலமுரளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட ஒன்பது ... மேலும்
 
temple news
நாகை ; கோலாட்டம், கும்மியாட்டத்துடன் நாகையில் வெகு விமர்சையாக நடைபெற்றது முத்து மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar